திங்கள், 14 ஏப்ரல், 2014

இறுதி மழைத்துளியாய்...


குடையின்றி மழையில்
நனையும் எனதுரிமை
சாளரம் வழியே
சாரல்களை விரல்களால்
உணர்தலென்று குறைக்கப்பட்ட
பின்னொரு பொழுதிலும்

பட் பட் என்ற கதவின்
இசைத் திளைப்பைக் கடந்து
வீசிய காற்றில் விலகிய
என் ஆடையுள் மேய்ந்து

பட்டென அறைகிறது உன்
பாலியல் உணர்வுகள்
படையெடுக்கிறாய் என்னுள்

மழை காணும்
பேராவலும் மறுதலிக்கப்பட

இழுத்து மூடுகிறேன் ஒருசேர
கதவுகளையும் என் கனவுகளையும்

வான்மழை சுரத்தல்
காணக்கிடைக்காது

ஆண்மலை சுமக்கிறது
என் பெண்ணுடல்

உன் வல்லுறவிடையிலும்
என் வலிகளினிடையிலும்
வலுக்கிறது நம்பிக்கை
இருக்க வாய்ப்பில்லை
இது இறுதி மழைத்துளியாய்...

..இரமேசு எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக