திங்கள், 14 ஏப்ரல், 2014

காத்திருப்பின் நீளத்தில்


நீயின்றி வெறுமையால்
நிரம்பும் இருண்மை
சுவற்றில் ஆங்காங்கே நூலாம்படை
சுற்றிலும் விரிந்த நூல்களின் படை
ஊடைக்குள் பாவாய் அவற்றோடு
பின்னிக் கிடக்கிறேன்
வெளிக்காற்றை விடுத்து
என் உயிர்க்காற்றில் உலவுகிறேன்
வயிற்றுணவை மறந்து
படித்துப் படித்து
விழிகளால் உணர்வை
நிறைத்துக் கொள்கிறேன்
உலரும் நாவினை
நனைத்து நனைத்துத்
தீர்ந்து போனது தேநீர்
தீராத உன் நினைவுகளோடு
இப்படியாய்
உனக்கான என் காத்திருப்பின் நீளத்தில்
சிறுத்துப் போகிறது சீனப் பெருஞ்சுவர்

ச.க.இரமேசு எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக