ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

தாய்மை…

 
வெறும் விருப்போடு
நின்றிட முடியவில்லை
இழுத்துச் செல்கிறாய் எம்மை
இம்மை கடந்து
தனைத் தாக்கும் தடைகளையும்
உள்வாங்கி ஒளிவிடும்
நெருப்பின் வெம்மை எனக்குள்ளும்
நிறையாத கருப்பையில்
நிறைந்து வலியும் தாய்மையில்
நிலைத்த எம்மைத் தலைகீழ் என்றே
கூறிவிட்டுப் போகட்டும்
உணர்வு மறுத்து வெறும் உறுப்பால்
அளவிடும் கூகைகளின் உலகு
ச.க.இரமேசு எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக